அலங்கார ஊர்திகளில் வடதமிழகத்தின் விடுதலை போராட்ட வீரர்கள் எங்கே? – ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளில் வடதமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “சென்னையில்…

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளில் வடதமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!

தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்” என தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.