ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர் தான் எனவும், முதலமைச்சரின் நடவடிக்கையை சட்டப்பேரவை பாராட்டுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது நடந்த அசாதாரண சம்பவங்கள் குறிதுது சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்து பேசினார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள், வேல்முருகன் உள்ளிட்டோர் ஆளுநர் உரையின் போது தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பியதாகவும், அது தவிர்த்திருக்கப்பட்டிருக்கலாம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநர் உரையின் போது நடந்த சம்பவம், உறுப்பினர்கள் உள்ளத்தில் இருந்த கருத்துகளை பேசி விட்டு சென்றார்களே தவிர அசாம்பாவிதமோ தவறான நிகழ்வுகளோ நடக்கவில்லை என கூறினார். வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு முழக்கமிட்ட உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கையை உள்வாங்கிக் கொண்டு இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை என்றும் ஆளுநர் பேசும்போது அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் விளக்கமளித்தார். மக்கள் பிரச்சனையை உறுப்பினர்கள் பேச வேண்டும் எனவும், ஆளுநர் ஒரு சில விஷயங்களை திருத்தியும், புகுத்தியும் பேசியதை தொடர்ந்து ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது, அதனை முதலமைச்சர் கவனித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கன்னியத்துடன் இருக்க வேண்டி அவை மாண்பை காத்தார் என்றார்.
ஆளுநர் அசாதாரனை சூழலை ஏற்படுத்தினாலும் முதலமைச்சரின் மதிநுட்பாத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். ஆளுநர் தனது உரையை வாசிப்பதற்கு மட்டுமே உரிமை கடமையே தவிர, அதில் இருக்கும் உரையை மாற்றுவதற்கு அனுமதி இல்லை. ஆளுநர் வாசித்து அளிப்பதோடு முடிந்து விட்டது அவருடைய கடமை.
எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் எதிர் கருத்தை சொல்ல வேண்டுமென்றால் அரசை தான் சொல்வார்களே தவிர ஆளுநர் செய்தார் என்று இதுவரை கேட்டதும் இல்லை அப்படி ஒரு மரபும் அல்ல. ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர் தான். முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து சுட்டிக்காட்டியது இந்த அவைக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், ஒட்டுமொத்த இந்தியாவும் பேசப்படக்கூடிய பொருளாகவும்இருக்கிறது. முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது என்றார்.