முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் என்ன? எப்படி புள்ளிகள் வழங்கப்படுகிறது?

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

 

செஸ் விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சம பலத்துடன் அதிக புள்ளிகளை பெறும் அணிகள், அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 பேர் இடம்பெறுவார்கள். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். அணியின் கேப்டன் ஆடும் வீரராக இருக்க வேண்டும். முதல், 2-வது, 3-வது, 4-வது செஸ் போர்டுகளில் யார்-யார் ஆடுவார்கள்? என்பதை அணி நிர்வாகம் வரிசைப்படுத்தி முன்கூட்டியே எழுதி கொடுத்து விட வேண்டும். கடைசி நேரத்தில் வரிசையை மாற்ற முடியாது.

ஆட்டத்தின்போது முதல் போர்டில் ஆடும் வீரருக்கு ஓய்வு கொடுத்தால், 2-வது வரிசை வீரர் முதல் போர்டில் ஆடுவார். அந்த மாதிரியான சூழலில் மாற்று வீரர் 4-வது போர்டில்தான் விளையாட முடியும். எந்த காரணத்தை கொண்டும் மாற்று வீரர் முதல் 3 போர்டுகளில் ஆட வைக்கப்படமாட்டார். வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி வழங்கப்படும். தோல்விக்கு புள்ளி கிடையாது.

 

ஆட்டத்தின் முடிவில் எந்த வீரர் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த அணிக்கு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும். ஆட்டம் சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

 

அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக்கொண்டே போகும். 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. 11 சுற்றுகள் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். ஒருவேளை இரு அணிகளும் ஒரே புள்ளியில் இருந்தால், ஆட்டங்களில் அதிக வெற்றி மற்றும் தங்களிடம் வீழ்ந்த அணிகளின் வலிமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு சாம்பியன் அணி தீர்மானிக்கப்படும்.

2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்படும். இதுதவிர டாப்-3 தனிநபருக்கும் பதக்கங்கள் உண்டு. இதற்கு ஒரே வரிசை போர்டில் விளையாடும் வீரர்களின் செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இந்த பதக்கத்தை பெற ஒரு வீரர் குறைந்தது 8 ஆட்டங்களில் ஆட வேண்டியது அவசியமாகும்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா

Halley Karthik

7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

Web Editor

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பழங்குடியின மக்கள்

EZHILARASAN D