32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மீனவர்களை அழைத்து வர மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக இலங்கை வெளியுறவு துறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்களது குடும்பத்தை சந்திக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை மறுநாள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading