குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மு.க. ஸ்டாலின் உள்பட 22 தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று முன்தினம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் அமைதி நிலவி வந்த நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மம்தா பானர்ஜி முதல் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக டெல்லியில் வரும் 15ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள அவர், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் 22 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட 22 தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் 15ம் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடூயூஷன் கிளப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் அவசியம் பங்கேற்குமாறும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.