நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
20160-ல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் சீமானுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கில் இன்று ஆஜரான சீமானை மீண்டும் பிப்ரவரி 16-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி எழும்பூர் 14-வது நீதிமன்ற நடுவர் பாலசுப்பிரமணி உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரிட்டிஷ் கட்டடங்கள் இன்றைக்கும் நிலைத்து நிற்கும்போது, திருவொற்றியூர் கட்டடத்தின் தன்மை இப்படி இருப்பதற்கு ஆட்சியாளர்களின் தவறு என குற்றம்சாட்டினார்.
மேலும், 7 தமிழர்கள் விடுதலையில் திமுகவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பு ஒன்றாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு வேறு விதவாக இருப்பதாகவும் அவர் சாடினார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அதற்கு தாங்கள் தயாராகி வருவதாகவும் சீமான் தெரிவித்தார்.