இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ள ’டிஎஸ்பி’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், “டிஎஸ்பி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தின் ட்ரைய்லரை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. முன்பெல்லாம் பெரிய விபத்துக்கள் நடக்கும் பொழுது கூட எப்போது சூட்டிங் வருவீர்கள் என்று கேட்பார்கள். அடுத்த படம் எப்போது ரிலீஸ் என்று கேட்பார்கள்.
தற்போது சின்ன இருமல் என்றால் கூட எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ஊடகங்கள் மத்தியில் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தயாராகி கொண்டிருக்கிறது” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, டிஎஸ்பி திரைப்படம் தான் மிகவும் எதிர்பார்த்த படம் என்றும், டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் இந்த படம், நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட், பொன்ராம் சார் சொல்லும் போது நன்றாக இருந்தது. விஜய் சேதுபதி நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. ரஜினிகாந்த் உடன் இணைவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். ரகசிய சந்திப்பு ஏதுமில்லை. தற்போது ஜிகர்தண்டா 2 படம் நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது. அது முடிந்ததும் தலைவருக்கு கதை சொல்லி, அவர் அதை ஓகே செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.