தன்னை தாக்க வரும் பாம்பு ஒன்றை பூனை பளார் என அறை விடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவானது ஒரு கோடியே 31 லட்சம் பார்வையாளர்களை கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. இதன் உடல் அமைப்பும், சீறிப்பாயும் தன்மையும் யாராக இருந்தாலும் தலைதெறிக்க ஓட்டம்பிடிக்கும் வகையில்தான் இருக்கும். இருந்தும் எல்லோரும் பாம்பை கண்டு பயந்து ஓடுவதில்லை. ஒரு சிலர் எப்பேர்ப்பட்ட விஷ பாம்பாக இருந்தாலும் அதை நேருக்கு நேர் தைரியமாக எதிர்கொண்டு விரட்யடிப்பவர்களும் உண்டு. இது மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், பூனை ஒன்று, பாம்பு ஒன்றை துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாம்பு பெரிய நாகமோ, இல்லை மலைப்பாம்போ இல்லை என்றாலும், நீ யாரா இருந்தா எனெக்கென்ன என்பதுபோல், மிகவும் அசால்டாக , பயமின்றி பாம்பை எதிர்கொள்ளும் இந்த பூனையின் செயல் பலரையும் ஆச்சர்யபப்டுத்தியுள்ளது.
அருகில் உள்ள கூண்டில் ஊர்ந்து சென்ற பாம்பை பூனை பின்னால் இருந்து பிடித்து இழுத்து வருகிறது. இந்த நேரத்தில் பாம்பு பூனையை மீண்டும் கடிக்க முயற்சிக்கிறது. பாம்பு கடிக்க வாயைத் திறந்து கொண்டு வந்தபோது, பூனை எந்தவித இரக்கமும் இன்றி பூனை, பாம்பை வெகு இயல்பாக கையாளும் இந்த வீடியோ கட்சியில், ஊர்ந்து செல்லும் பாம்பை, பூனை பின்னால் இருந்து பிடித்து இழுக்கிறது.
அப்போது பாம்பு வாயை திறந்துகொண்டு பூனையை கொத்த முயற்சிக்கிறது. பாம்பை கண்ணோடு கண் வைத்து மிகவும் சார்பாக உற்றுநோக்கும் பூனை, எந்தவித பயமும் கொள்ளாமல், அசால்ட்டாக கண்ணிமைக்கும் நேரத்தில் அதனை அறைவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோவை ஏற்கனவே ஒரு கோடியே 31 லட்சம் பார்வையாளர்களை கடந்து, அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில், பெரும்பாலானோர் இந்த வீடியோவின் கீழ் பூனையைப் பாராட்டி கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர் . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா