ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஹனிமா விஹாரியிடம் ரவிசந்திரன் அஸ்வின் தமிழில் பேசினார்.
3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது, விஹாரியுடன் அஸ்வின் தமிழில் பேசினார்.
ஆடு மாமா ..கவலப்படாதா… பால் நேரா தான் வரும்.. பத்து பத்து பாலா பார்த்துக்கலாம் என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இவை தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.







