கரூர் காணியாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
காலை 8 மணிக்கு சோதனை தொடங்கிய சோதனை மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட்டில் மூக்கையாவின் மகன் வெங்கடேசன் அவரது தொழில் பங்குதாரர் ரமேஷ் ஆகிய இருவரும் மேற்கொண்ட கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகள் . மேலும் பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







