பன்னாட்டு நிறுவனங்களின் ஆன்-லைன் வணிகத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
பண்டிகை காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மக்கள் மத்தியில் மாயையை ஏற்படுத்தி விளம்பரங்களை மேற்கொண்டு வணிகத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, வாரியம் அமைத்திருப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டுகிறது. முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பண்டிகை காலங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக மக்கள் மத்தியில் மாயையை ஏற்படுத்தி விளம்பரங்களை மேற்கொண்டு, வணிகத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு அரசு, தடை விதிக்க வேண்டும்.
பண்டிகை காலங்களில் சில அதிகாரிகள் சில கடைகளை குறிவைத்து தவறான செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகள் தவறு பற்றி ஆதாரம் தந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே அதிகாரிகள் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். இவ்வாறு கூறினார்.







