ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியனது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும் மும்பை படப்பிடிப்பின் போது ரஜினி – அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பியது. இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி.
https://twitter.com/news7tamil/status/1790016202472861956
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கூலி எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.







