25.5 C
Chennai
November 29, 2023
தமிழகம் பக்தி செய்திகள்

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் உள்ள தோரணமலை முருகன் திருக்கோயிலானது பாரம்பரியமிக்க மிக பிரபலமான திருக்கோயில்களில் ஒன்றாகும்.

அதாவது, அகஸ்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இந்த முருகன் திருத்தளத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது
வழக்கம்.

அந்த வகையில், முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான வைகாசி மாத கடைசி வெள்ளியான இன்று தோரணமலை உச்சியில் உள்ள ஒரு நீரூற்றிலிருந்து புனித நீர் எடுத்து
வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் முருகப்பெருமானுக்கு நடைபெற்றது.

தொடர்ந்து, பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு
பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்த
நிலையில், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமானுக்கு வர்ண கால
சிறப்பு பூஜைகளானது விவசாயம் செழிக்க வேண்டியும், மாணவ மாணவிகள் கல்வி மேம்பட வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதிகாலையிலே தொடங்கிய இந்த சிறப்பு பூஜையில், கடையம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

—-.வீரம்மாதேவி

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy