விஜய் 67 படத்தின் டீசர், கதை, வில்லன்கள் குறித்த அப்டேட்!

 வாரிசு படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் படதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங் கு இயக்குநர் வம்சி…

 வாரிசு படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் படதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங் கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.பின் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்துவந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது.அந்த லீக் ஆன வீடியோவில் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள சரத்குமாரை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. காட்சியில் விஜய், பிரபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.ஏற்கனவே படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனதால், மீண்டும் இதுபோல் சம்பவம் நேரக்கூடாதென இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் பட்டதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகை அன்ரும் படத்தின் டீசர் ஆங்கில புத்தாண்டு (1-1-2023) அன்றும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரித்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் பேசப்பட்டு வருவதாக்கவும் கேங்ஸ்டர் கதைக்களத்தைக் கெண்ட இந்த படத்தில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கப்போவதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.