சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய வழியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி, அங்குள்ள வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருநாள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்தார். அப்போது, அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய சிறார்களுக்கான இல்லத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மயிலாப்பூர் காய்கறி சந்தை அருகே காரைவிட்டு இறங்கிய மத்தியமைச்சர் அங்குள்ள சிறு, குறு காய்கறி வியாபாரிகளுடன் உரையாடினார்.
During her day-long visit to Chennai, Smt @nsitharaman made a halt at Mylapore market where she interacted with the vendors & local residents and also purchased vegetables. pic.twitter.com/emJlu81BRh
— NSitharamanOffice (@nsitharamanoffc) October 8, 2022
தொடர்ந்து அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் இருந்து மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கினார். இந்த காணொளியை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.