கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமீன்

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ‘மக்கள் ஆசி யாத்திரை’யில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயண் ராணே, “நாடு சுதந்திரம் அடைந்து…

மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ‘மக்கள் ஆசி யாத்திரை’யில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயண் ராணே, “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்கிற விவரம் கூட முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு தெரியவில்லை. இது அவமானமாக உள்ளது. நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்” என்று கூறி யிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜவை எதிர்த்து சிவசேனா தொண்டர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பல இடங்களில் மோதலாக வெடித் தது. நாராயண் ராணேவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாசிக் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு தடைக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் ரத்னகிரியில் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இது முதல் முறை. இவரது கைதுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நாராயண் ரானே ராய்கட் மாவட்டத்தில் உள்ள மஹட் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்றிரவு விசாரித்த, நீதிமன்றம் 15 ஆயிரம் ரூபாய் பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, நாசிக் போலீசார், செப்டம்பர் 2 ஆம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராக அமைச்சர் நாராயண் ராணேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.