மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிமோகா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்று காரில் திரும்பும் போது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து பெங்களூருவில்…

மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிமோகா பகுதி பாஜக கூட்டத்தில் பங்கேற்று காரில் திரும்பும் போது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயங்கி விழுந்ததாகவும், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply