28 C
Chennai
December 10, 2023
குற்றம் தமிழகம்

அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகன் மனமுடைந்து உயிரிழப்பு !

பல்லாவரத்தை அடுத்த பம்மலில் அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்
கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்த இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அடிக்கடி செல்போனில் பேசி விளையாடி கொண்டிருப்பதை அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும் நேற்று இரவு செல்போன் பயன்படுத்துவதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதில் மனமுடிந்த சேவியர் இன்று காலை அவரது தந்தை வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy