“தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!

தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகம் முழுவதும் வாழும் அன்பான தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்!

இந்த புது வருடம் உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகளை மலரச் செய்யட்டும். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையால் நிரம்பி, ஆரோக்கியம் உறுதியாக இருந்து, செழிப்பும் சந்தோஷமும் உங்கள் இல்லங்களை ஒளிரச் செய்யட்டும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகி, கனவுகள் நனவாகும் இனிய நாளாக இந்த உகாதி அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.