திருவள்ளூர் அருகே கஞ்சா போதையிலிருந்த இருவர், இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 21) தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாகக் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்ற பில்லாவின் கூட்டாளிகளான இருவர் சஞ்சயின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று, தாமரைபாக்கம் அடுத்த புன்னப்பாக்கம பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் அவரை அமர வைத்துவிட்டு’, மற்றொருவரை வீடியோ காலில் தொடர்புகொண்டு இவரா எனப் பார் எனச் சொல்லி சொல்லி கை மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். மேலும் சோற்றில் ரத்தத்தை ஊற்றி சாப்பிடச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மை செய்தி: ‘சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போகிறதா?’
ஒரு கட்டத்தில் கஞ்சா போதையிலிருந்த இருவரும் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, அந்த இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி வெங்கல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றபோது, கஞ்சா போதையிலிருந்தவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களைத் துரத்திப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.