சென்னை ஈ.வே.ரா சாலையில், சோதனை ஒட்டமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளவில் ஏற்படுவதால், ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் வரும் 09.07.2022 முதல் 10 நாட்களுக்குச் சோதனை ஒட்டமாக அமல்படுத்தப்பட உள்ளதாகச் சென்னை, போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி,
(i) கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாகத் திருப்பிவிடப்படும் எனவும், இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈவிஆர் சாலையைச் சென்று, நெல்சன் மாணிக்கம் சாலையை அடைந்து அமைந்தகரைக்குச் செல்ல சாலைக்கு மேம்பாலத்தில் வழியாகச் சென்று அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ii) அமைந்தகரையிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா ஆர்ச் செல்லலாம். ஆர்ச் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது தவிரத் தடையின்றி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்’
(iii) அண்ணாநகரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பும்போது, பாதசாரி கடக்கும் போது தவிர, இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(iv) கோயம்பேட்டிலிருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து. அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈ.வி.ஆர் சாலையிலும் நெரிசல் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனச் சென்னை, போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.








