குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குக் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின்…

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குக் குவிந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக சீசன் தொடங்கப்பட்ட நிலையிலும் அருவிகள் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளான மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,30,000 கன அடியாக அதிகரிப்பு!’

இதனால் நேற்று வரை சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அருவிகளில் காட்டாற்று வெள்ளம் சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குக் குவிந்து வருகின்றனர். மேலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மெயின் அருவி பகுதியில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அருவி பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் ஏறி சுற்றுலாப் பயணிகள் குத்தாட்டம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.