ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாகக் காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கு, ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது, நேற்று மாலை நிலவரப்படி 1,25,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 1,30,000 கன அடியாக உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘முக்கிய விளையாட்டு செய்திகள்’
மேலும், ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, அருவியில் இறங்கிக் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.