முக்கியச் செய்திகள்விளையாட்டு

சூப்பர் 8 சுற்று – இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்றைய போட்டியில் இந்தியா அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : “பவதாரிணியின் குரலை இப்படி பதிவு செய்வேன் என நினைக்கவில்லை” – ‘The GOAT’ படப் பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா உருக்கம்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. வங்கதேச அணியில் டஸ்கின் அகமது இன்றையப் போட்டியில் விளையாடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Jeba Arul Robinson

வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

Web Editor

சந்தேகத்தின்பேரில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading