உலகில் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவராக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஹேர்மன் ஐன்ஸ்டீன், தாயார் போலின் கோச். தன்னுடைய இளம் வயதில் அனைவரும் விரும்பும் புத்திசாலி பிள்ளையாக ஐன்ஸ்டீன் இருக்கவில்லை.
அவரது 5 வயதில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரது அப்பா ஹேர்மன் திசைகாட்டும் திசைமானி ஒன்றை அளித்தார். இது என்னவென்று கேட்ட ஐன்ஸ்டீனிடம் ‘இதுதான் திசைகாட்டும் கருவி. இதை நீ எப்படி பிடித்தாலும் திருப்பினாலும் இதற்குள் இருக்கும் முள் வடக்கு திசை நோக்கியே இருக்கும். இதைத்தான் கடலில் பயணம் செய்யும் மாலுமிகள் பயன்படுத்துவார்கள்’என்றார்.
ஆராய்ச்சியில் ஆர்வம்
இவர், தனது 12 வயதிற்குள் இயற்கணிதம் மற்றும் யூக்ளிடியன் வடிவவியலை எளிதில் கற்று தேர்ந்தார். மேலும் தனது 12வது வயதில் பிதாகரஸ் தேற்றத்தின் ஆதாராத்தை சுயமாக கண்டுபிடித்தார். ஐன்ஸ்டீன் தனது 16வது வயதில் காந்த சக்தி பற்றிய தனது முதல் ஆய்வறிக்கையை எழுதினார். இவர் 150-க்கும் மேற்பட்ட அறிவியல் அல்லாத கட்டுரைகள் மற்றும் 300 அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
நோபல் பரிசு
1905-ம் ஆண்டு பிரௌனியன் இயக்கம், சிறப்பு சார்புக் கோட்பாடு, ஒளி மின்விளைவு, E=mc2 என்ற நிறை ஆற்றல் சமநிலை விதி என்ற நாடு கோட்பாடுகளை வெளியிட்டார். இது மட்டுமல்ல, இன்னும் பல சாதனைகளை அவர் அறிவியலில் நிகழ்த்தினார். 1921 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை ஐன்ஸ்டீன் வென்றார். ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியதன் விளைவாகவே இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.1925ம் ஆண்டில், அவரது சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் கோட்பாட்டிற்கான பங்களிப்புகளுக்காக லண்டனின் ராயல் சொசைட்டியின் மதிப்புமிக்க கோப்லி பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
வாழ்க்கை
இவர் 1909ம் ஆண்டு ஜனவரி மாதம் மிலேவா மாரிக் என்பவரை மணந்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை 1919ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. பின்னர் எல்சா என்பவரை திருமணம் செய்தார். இவர் 1939ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஐன்ஸ்டீன் இசையை விரும்புவராகவும் திகழ்ந்தார். ஐன்ஸ்டீன் ஒரு இயற்பியலாளராக இல்லாவிட்டால், அவர் ஒரு இசைக்கலைஞராக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் தேச தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். மகாத்மா காந்தி மற்றும் ஜன்ஸ்டீன் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்நாளில் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரின் சில பொன்மொழிகல் சில…
1. இந்த உலகில் இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை: அவை பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்; இதில் பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
2. உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டுமெனில், அவர்களுக்கு விசித்திரக் கதைகளை கற்றுக் கொடுங்கள்.
3. வாழ்க்கை சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை வைத்திருக்க, நீங்கள் தொடர்ந்து நகர வேண்டும்.
4. ஒரு புத்திசாலி நபர் ஒரு பிரச்னையை தீர்க்கிறார். அறிவுள்ளவன் அதைத் தவிர்க்கிறான்.