புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,87,880 ஆக உள்ளது.

ஒரே நாளில் 39,130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர. மொத்தம் இதுவரை 3,01,43,850 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 4,32,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 581 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தம் உயிரிழப்பு 4,11,989 ஆக அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.