நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,87,880 ஆக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரே நாளில் 39,130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர. மொத்தம் இதுவரை 3,01,43,850 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 4,32,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 581 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தம் உயிரிழப்பு 4,11,989 ஆக அதிகரித்துள்ளது.