தமிழ்நாடு முழுவதும் நாளை TNPSC குரூப் 4 தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு நடைபெறவுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது.  தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி…

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது.  தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.  அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்,  வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,  தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ம் தேதி தொடங்கி பிப். 28-ம் தேதி வரை நடைபெற்றது.   தமிழ் தகுதித் தாள் 100,  பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.  இதில்,  தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.