தமிழகத்தில் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல் 28) ஆகும். குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7,382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை உதவியாளார், வரித் தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 7,382 காலிப் பணியிடங்கள் இந்த எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான அறிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மார்ச் 29ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 30 ஆம் தேதி முதல் http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை 17.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 4 எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 28) கடைசி நாள். இன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 7,382 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு helpdesk@tnpscexams.in மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.