முக்கியச் செய்திகள் தமிழகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு 900க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று 900க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,06,493 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 900க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,204 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,60,419 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 10,745 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 106 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. 132 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோயமுத்தூரில் 102 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 124 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்

G SaravanaKumar

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

G SaravanaKumar

‘பத்து தல’ சென்சார் கட் விமர்சனம் -மகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!!

Web Editor