அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் அணுக காவல்துறை அறிவுறுத்தல்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த தவல்களை பகிர தமிழ்நாடு காவல்துறை தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த தவல்களை பகிர தமிழ்நாடு காவல்துறை தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்த காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி உள்ளிட்ட 30 நபர்கள் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகா கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார்;

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு, 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சிலர் அரசு வேலை, சிலர் வங்கி வேலை, சிலர் இரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர், தஞ்சாவூரைச் சேர்ந்த சேஷாத்திரியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி இராணி எலிசபத் (36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி, கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் என்பவரும், அடங்குவர்.

இந்த 30 மோசடி நபர்களும் தீபாவளி முந்தைய தினத்தன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.

இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு, இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது.

இது போன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள்.044-28447701 & 28447703 (Fax), செல்: 94981 05411 (Whatsapp) மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண்.044-23452380 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.