டாஸ்மாக் வருவாய் தொடர்பாக மதுவிலக்கு & ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மூலம் பெருமளவில் வருமானம் வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் நூறு கோடி ரூபாயை கடந்து மது விற்பனையாகும். இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மதுவிலக்கு & ஆயத்தீர்வைத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், “கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் ( மார்ச் வரை ) ரூ.2,200 கோடி அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. 2020 -2021ம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் ( மார்ச் வரை ) மட்டும் ரூ.36,013 கோடி மதுபானம் மூலம் வருவாயாக கிடைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மதுபானங்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் அரசுக்கு வரும் வருவாய் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதுமாக கணக்கிடும் பட்சத்தில் வருவாய் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.