டாஸ்மாக் நாளை இயங்காது.

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம்…

நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதி முதல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு இரவு நேரங்களிலும்,  ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் சம்மந்தமான கடைகள் மட்டும் நாளை (09-01-2022) இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து வகையான நிறுவனம் மற்றும் கடைகளுக்கு விடுப்பு வழங்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் மதுபானக்கடைகள் நாளை இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை ஊரடங்கு கடைப்பிடிக்கும் சூழலில் நாளை ஒரு நாள் (09-01-2022) அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.