திருப்பூர் பல்லடத்தில் அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்ற லாரியை நிறுத்திய கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியது அம்பலமானது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி-கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் அதிகாலையில் லாரி ஒன்று முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் எரிய விட்டப்படி சென்றுள்ளது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் முந்தி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
லாரிக்கு எதிரே கோவையில் இருந்து காரில் வந்த கல்லூரி மாணவர்களான பரணிதரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அதிக வெளிச்சத்துடன் லாரி செல்வதால் முன்னால் செல்லும் வாகனங்கள் பார்க்க முடியவில்லை எனக்கூறி லாரி ஓட்டுநரிடம் சண்டையிட்டுள்ளனர். மேலும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் காரை துரத்தி சென்று தாராபுரத்தில் வைத்து மடக்கி பிடித்து விசாரணை நடத்துவதற்காக பல்லடம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இருவரிடமும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பரணிதரன் மற்றும் அசோக்குமார் இருவரும் கல்லூரி மாணவர்கள் எனவும்,தாங்கள் மிரட்ட பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி எனவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-வேந்தன்