திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாலை நான்கு மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஊதியூர் மேற்கு பகுதியில் கடந்த 3ம் தேதி அன்று செம்மறி ஆடு ஒன்று சிறுத்தை தாக்கி உயிரிழந்திருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனைக்கல் தோட்டம் பகுதியில் உள்ள கன்றுக்குட்டி ஒன்றை அடித்து சிறுத்தை காட்டுக்குள் இழுத்து சென்றது.எனவே சிறுத்தை பொதுமக்களை தாக்கும் முன்னர் அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்கான பணிகளில் வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய நேரடி கள ஆய்வு மேற்கொண்ட வனத்துறை சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே சிறுத்தையை பிடிப்பதற்காக அதிநவீன கேமராக்களை உபயோகபடுத்தி வருகிறது. சிறுத்தை பிடிபடும் வரையில் பொதுமக்கள் யாரும் மாலை 4 மணிக்கு மேல் மலைக்கோ அல்லது மலை மேல் உள்ள கோவில்களுக்கே செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளது.