பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க இயலும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னொசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டில், தமிழ்நாடு அரசின் டான்சிம் நிறுவனம், மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப்” – சென்னை மகளிர் வட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னொசண்ட் திவ்யா, திட்ட இயக்குநர் சிவராஜ நேச்சசுரல் அழகு நிலைய நிறுவனர் சி.கே.குமரவேல் மற்றும் வீடோ நிறுவனர் காதம்பரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் உரையாற்றிய இன்னொசண்ட் திவ்யா, மகளிர் திறன்மேம்பாடு, நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், உலக அளவில் தொழில் மற்றும் பணியிட வாய்ப்புகளில் 47 விழுக்காடு பெண்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு 19 விழுக்காடாக உள்ள நிலையில் தமிழ்நாடு கிராமப்புறங்களில் ஆச்சரியமூட்டையும் வகையில் பெண்களில் பங்களிப்பு 75 விழுக்காடாக உள்ளது என குறிப்பிட்டார். ஆனால் நகர்புறங்களில் 23 விழுக்காடாக உள்ளது என்று கூறிய இன்னொசண்ட் திவ்யா, வீட்டில் இருந்து புறப்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் இந்த விழுக்காட்டை அதிகரிக்க முடியும் என்றார்.
அதேபோல பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பெண்களுக்கான வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.