நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்

பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்தள்ளார்.  பிரபல பட்டிமன்ற பேச்சாளரான நெல்லை கண்ணன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில்…

பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்தள்ளார். 

பிரபல பட்டிமன்ற பேச்சாளரான நெல்லை கண்ணன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார்.

நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்குச் சிந் தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் நெல்லை கண்ணன் (வயது 78) வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது. அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.