கொடியம்பாளையம் கடற்கரையோரம் 3 சிலைகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரையோரம் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இதில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க…

மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரையோரம் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இதில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.  அப்போது கடற்கரையோர பகுதியில் கற்சிலை தென்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மேலும் இரண்டு சிலைகள் இருப்பது தெரிய வந்தது. மூன்று சிலைகளையும் மீட்ட மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து சிலைகளை கைப்பற்றிய நிலையில் சிலைகளை குறித்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாருக்க தகவல் அளித்தனர். இதில் இரண்டடி உயரமுள்ள பெருமாள் சிலையும், ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலையும் மற்றும் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலையும் பஞ்சாயத்தார் மற்றம் பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

இந்த சிலைகள் எப்படி அங்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.