கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு
எதிர்ப்புத் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று, நகராட்சி ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஜார் பகுதியில் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 350 -க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கானப் பணிகளை மேற்கொள்ள இருந்த நிலையில், வியாபாரிகள் நீதிமன்றம் சென்று சில மாதம் தடையானை பெற்றனர்.
நகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டபோது நீதிமன்றம் 14ஆம் தேதிக்குள் பழைய மார்க்கெட் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள வியாபாரிகள் தங்களுக்கு புதிய இடத்தை தேர்வு செய்து, அங்கு கடை அமைப்பதற்கு வழிவகை செய்த பின்னர் மார்க்கெட்டை இடிக்கவும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மார்க்கெட் பகுதியில் இருந்து பேரணியாக நடந்து சென்று நகராட்சி ஆணையாளர் ராஜாராமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
—ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்