28.6 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழர்களை சீண்டிப் பார்த்தால், முதலமைச்சர் இப்படித்தான் நடந்துகொள்வார்: திமுக கனிமொழி

தமிழர்களை சீண்டிப் பார்த்ததால்தான், எப்போதுமே அமைதியாக பேசும் முதலமைச்சர் ரொம்ப கறாராக பதில் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை சங்கமம் கலை நிகழ்வுகளில் பங்கேற்கும் கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடினார் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி. சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் கலைஞர்கள் இசை முழங்க பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,

தமிழகம், தமிழ்நாடு என இரண்டும் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தான் நாம். ஒன்று சொல்லக்கூடாது என்று சொல்லும்போது நம்முடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு சொல்லக்கூடாது என சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

என்னுடைய பொங்கல் வாழ்த்து அட்டையில் தமிழ்நாடு என்ற கோலமிட்டதை எல்லோருக்கும் அனுப்பி இருந்தேன். அதனைப் பார்த்து பதிவு செய்திருந்தனர். தமிழர்களை சீண்டிப் பார்த்தால், உள்ளே இருக்கும் தமிழ் உணர்வு, சுயமரியாதை எதையும் தணித்துவிட முடியாது என்பதை தெளிவாக காட்டக்கூடியதாக இருக்கும். அதனால்தான் எப்போதுமே அமைதியாக பேசும் முதலமைச்சர் கூட ரொம்ப கறாராக பதில் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தியா என்பது ஒரே அடையாளமாக ஒன்றாக கரைந்துபோக வேண்டுமென நினைப்பவர்கள் தனித்த அடையாளங்கள் கரைந்துபோக வேண்டுமென நினைப்பார்கள் என்று கூறினார்.

இதனையடுத்து, சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபழனி பஜனை கோயில் தெருவில் திமுக 131 ஆம் வட்ட கழக செயளாலர் தட்சன் ஹரிஹரன் தலைமையில், சென்னையில் ஒரு கிராமத்து பொங்கல் என்ற அமைப்பில் பாரம்பரிய கலைகளுடன் கூடிய பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ,சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் மயிலை த.வேலு மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கனிமொழி எம்.பி மேடையில் பேசியது,

உலகமே பின் செல்லக்கூடிய இந்த உழவு திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய, இந்த வேளையிலே நாம் சில பேருக்கு நன்றியையும் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் நம் நன்மைக்கு எதிராய் நிற்ப்பவர்கள் எதிர்கட்சி என்று ஆகிட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இந்த பொங்கலில் தமிழர்களின் சுயமரியாதை உணர்வுகளை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி, தமிழ்நாடு என்று பெருமையோடு சொல்லக்கூடிய திராவிட மாடல் அரசு என்பதை சொல்வதற்கு சில பேருக்கு பயமா இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் இந்தியாவை தாண்டி வளர்ந்து இருக்கக்கூடிய நாடுகளில், அந்த அந்த ஊர்களில் இருக்கக்கூடிய வாழ்க்கை தரத்தை எட்டி தொட்டுக் கொண்டு நிற்கக்கூடிய ஒன்றுதான் திராவிடம் மாடல் ஆட்சி. கல்வியாக இருக்கட்டும் அங்கு இருக்கக்கூடிய பிஜேபி ஒன்றிய அரசு 30 வருடம் பொறுத்து சாதிப்போம் என கூறியதை தமிழ்நாடு இப்பொழுதே சாதித்து கடந்து விட்டது என தெரிவித்தார்.

மேலும்,வளர்ந்த நாடுகளில் கூட மருத்துவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்தித்து வைத்தியம் பார்த்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடு தேடி வந்து கதவை தட்டி மருத்துவ வசதிகளை செய்யக்கூடிய ஆட்சி திராவிட மாடல் அரசு எனவும் குறிப்பிட்டார்.

இந்த சாதனைகளை எல்லாம் செய்து விட்டோம் என்று சில பேர், நாம் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்திலே நம்மை மறுபடியும் கூர்த்திட்டி விட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பொங்கல் திருநாளில் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading