திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 120லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன தணிக்கையிலும்,சோதனையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
கொக்கலாடி என்ற பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டப்போது கீழக்குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த அஜித்குமார் (26), நளினி (36), ரத்தினகுமார் (36)ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 120 லிட்டர் பாண்டி சாராயம் கைப்பற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைப் போன்று விளக்குடி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த அழகேசன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் மது பாட்டில்கள் மற்றும் பாண்டி சாராயத்தை கைப்பற்றினர்.கைப்பற்றிய சாராயங்களை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.
வேந்தன்