பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!

விசாரணைக்கு சென்றவர்களின்  பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடியால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

விசாரணைக்கு சென்றவர்களின்  பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடியால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட
கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை சிபிசிஐடி காவல்துறையினர் நான்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதன்படி
விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் உதவி ஆய்வாளர்
முருகேசன் காவலர்கள் விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

அதே போன்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த
புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனிப்பிரிவு சிறப்பு காவலர் போகன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் பெயர்களும் சேர்க்கப்பட்டன.

இவ்வாறு சிபிசிஐடி காவல்துறையினர் பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அதே வேளையில் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 பேர் மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு பணிகளை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில் சிபிசிஐடி காவல் துறையால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன் காவலர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதோடு பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியல் ஆயுதப்படை என நடவடிக்கைக்கு உள்ளான காவலர்களும் இதர காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். எனினும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான பணியிடை மாற்ற நடவடிக்கைதான் இது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

—–ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.