தமிழகம் பக்தி செய்திகள்

கரூர் ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

கரூர் மேட்டுத் தெரு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத் தெரு பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ அபய ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், வெள்ளி கருட வாகனத்திலும், சிம்ம வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவில் காட்சியளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி முத்தங்கி அலங்காரத்தில் ஆலயம் வலம் வந்த பிறகு ஆலயத்தில் அருகே உள்ள தேர்மீது கொலுவிருக்க செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் ஆலயத்திலிருந்து முக்கிய வீதி வழியாக சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

———அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

’கல்வியில் இந்துத்துவாவை புகுத்த ஆளுநர்கள் மூலம் பாஜக முயற்சி’ – சீத்தாராம் யெச்சூரி

EZHILARASAN D

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு: 21 பேர் உயிரிழப்பு…!

Web Editor

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை

G SaravanaKumar