33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

இழி சொல்லுக்கு பதில் சொல்ல நேரமில்லை- முதலமைச்சர்

திமுக அரசு வெறும் கட்சி அல்ல, கொள்கை கொண்ட இயக்கம். திராவிடம் என்றால் எல்லாம் எல்லாருக்கும் என்பதே பொருள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் மாற்றுகட்சியை சேர்ந்த 50000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், அதிமுகவின் கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ,தேமுதிகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் உள்ளிட்ட மாற்றுகட்சியைக் சேர்ந்த 50000 திமுகவில் இணைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பல்வேறு இயக்கங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்களை திமுக தலைவராக நான் உங்களை வரவேற்கிறேன். மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களைக் மாற்றான் தோட்டத்திலிருந்து வந்தவர்கள் போல் இல்லாமல் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள் என்றார்.

உங்களையெல்லாம் சிந்தாமல், சிதறாமல் இயக்கத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் செந்தில்பாலாஜி. செந்தில் பாலாஜி ஒரு பணியில் இறங்குகிறார் என்றால் அது வெற்றியாக தான் இருக்கும். எண்ணிக்கையை விட எண்ணம் தான் ரொம்ப முக்கிய என்று இருப்பவர் செந்தில்பாலாஜி என்று கூறினார்.

LIVE : மாற்றுகட்சியினர் திமுகவில் இணையும் விழா - நேரலை | CM MK Stalin | ஆச்சிபட்டி,பொள்ளாச்சி

இந்த பொள்ளாச்சி ஆச்சிபட்டி எனக்கு ஆச்சரியப்பட்டியாக தான் தெரிகிறது. இன்று கட்சி தொடங்கிய சில நாட்களிலே நான் தான் முதல்வர் என்கிறார்கள் சிலர். இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். ஆனால் நம் கழகம் காணாத புகழ் இல்லை, படாத வேதனை இல்லை. நாம் அடையாத வெற்றியல்ல. நாம் அடையாத தோல்வியும் அல்ல என்று கூறினார்.

திமுக அரசு வெறும் கட்சி அல்ல. அது ஒரு கொள்கை கொண்ட இயக்கம். திராவிடம் என்றால் எல்லோருக்கு எல்லாம் என்பதே. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைப்பு, அரசு முன்மாதிரி பள்ளி, இன்னுயிர் காப்போம் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நான் சொல்லி செய்கிறவன் அல்ல. சொல்லாத்தையும் செய்பவன். அண்ணாவின் மீது ஆணையாக நான் தேர்தலில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்றவர்கள் சொல்லும் இழி சொல்லுக்கு பதிலளிக்க நேரமில்லை. அவர்களை விமர்சித்து நேரத்தைக் வீணடிக்க விரும்பமில்லை. அந்தநேரத்தில் மக்கள் பணியாற்றி உங்களிடம் பாராட்டு பெற்றால் போதும். உங்களை கருப்பு , சிவப்பு மனிதர்களாக மாற்றிக்கொள்ளுங்கள். செந்தில்பாலாஜி இன்று 55000 பேரை இணைத்திருக்கிறார் என்றால், அது கழக ஏட்டில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபட வேண்டியவை என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading