வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண்- முதலமைச்சர்

வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை, இது காந்திய மண் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என காந்தி ஜெயந்தியையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த…

வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை, இது காந்திய மண் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என காந்தி ஜெயந்தியையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

https://twitter.com/mkstalin/status/1576423363555504128

 

காந்தி ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.