31.1 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் என மாணவியின் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் காவல் துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? உடல் எப்போது வாங்கப்படும்? என மாணவியின் தந்தை தரப்பில் 12 மணிக்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் 4500 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது”என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் தரப்பு, உடலை நாளை பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிபதி, கண்ணியமான முறையில் இறுதி சடங்கை நடத்துங்கள். அந்த ஆன்மா இளைபாரட்டும் என்று கோரினார்.

மேலும், மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிசடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து மகளின் உடலை பெற்றுக்கொள்வதாகவும், நாளை நண்பகல் 11 மணிக்கு
வாங்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் கடைசி நேரம் வரை
இக்கட்டான சூழலை வைத்திருக்கவே மனுதாரர் விரும்புவதாகவும், முன்னதாக உடலை
பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இறுதி சடங்கை நடத்த வேண்டுமென வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, நாளை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள
வேண்டுமெனவும், மாலைக்குள் இறுதி சடங்குகளை முடிக்க வேண்டுமெனவும்
உத்தரவிட்டார். ஜிப்மர் மருத்துவனனையின் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக
வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில்  +2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கோரி மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன் அந்தப் பள்ளி முன் திரண்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி சூறையாடப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு படி மாணவயின் உடல் மறு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமாக எதுவும் கண்டறியப்படவில்லை என்று தடயவியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாணவியின் உடலை 10 நாட்களுக்கு பிறகு பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading