திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா தேவி என்ற மாணவி கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார். எனவே, அவளாசௌமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார். தீட்சனா நேற்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது விடுதி அறையின் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால், கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்து கதவைத் திறந்துள்ளார்.
அப்போது உள்ளே சீலிங் ஃபேனில் அவளாசௌமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து தீட்சனா அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.