ஆக்கிரமிப்புகளை அகற்றுதலில் ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித்…

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கான மூன்று மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்களுக்கான மாநாட்டில் நிறைவு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களையும் மாநிலத்திலேயே சிறந்த மாவட்டங்களாக உருவாக்க ஆட்சியர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரிடர் காலங்களில் மக்களை காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் ஆட்சியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அண்மைச் செய்தி: மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும், பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள்தான் நம் அனைவருக்கும் எஜமானார்கள் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களுக்காக செலவிடப்படும் நிதி, 100 சதவீதம் அவர்களை சென்றடையச் செய்யக்கூடிய நிர்வாகம்தான் சிறந்த நிர்வாகம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அதனை மனதில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.