அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத்தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா, சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், அதில் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரியும், அதில் தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்த மனுகளை ஏற்று சென்னை உரிமையில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், வி.கே.சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அதிமுக பொது குழு தீர்மானம் செல்லும் என சென்னை உரிமையில் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி உத்தரவிட்டுள்ளார்.