மதுரை ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி நாளை (ஆக.27) விசாரணை நடத்த உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணம் செய்த 63 பேரில், 20 பேர் படுகாயமடைந்த நிலையில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னெள காவல் துறைக்கு தெற்கு ரயில்வே தகவல் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், மதுரை ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி நாளை (ஆக.27) விசாரணை நடத்த உள்ளதாகவும், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த விசாரணை தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், விபத்து சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயம் தொடர்பான. தகவல் மற்றும் சான்றுகளை இருக்கும் பட்சத்தில் அதனை வழங்கலாம் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.