ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை! ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் சவரன்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.49,880-க்கு விற்பனையாகிறது.  தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.49,880-க்கு விற்பனையாகிறது. 

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள் : பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மார்ச் 20 ஆம் தேதி ஒரு கிராம் ரூ. 6,140 க்கும், ஒரு சவரன் ரூ.49,120 க்கும் விற்பனையானது.

இந்நிலையில்,  இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760,  கிராமுக்கு ரூ.95 அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.49,880-க்கும்,  ஒரு கிராம் ரூ.6,235-க்கும் விற்பனையாகிறது.  ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளதும்,  விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,000 கடந்துவிடும் என்றும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.81.50-க்கும்,  ஒரு கிலோ ரூ. 81,500-க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.